ஆதியாகமம் 11:19-25 தமிழ்

19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.

21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

22 செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.

23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.

25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.