16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.